All
Looks like you've blocked notifications!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதி ஊர்வலமாக, மும்பை அந்தேரி செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து வில்லே பார்லே மயானத்திற்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.

 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

 

மேலும், வழியெங்கும் ஏராளமான ரசிகர்கள் அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் பாதையில் நின்று அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க முயன்றனர்.

 

ஆனால், வெளியிலிருந்து யாரும் அவர் முகத்தைப் பார்க்க இயலாத அளவுக்கு ஸ்ரீதேவியின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் சற்றுமுன், வில்லே பார்லே மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

BY MANJULA | FEB 28, 2018 4:32 PM #SRIDEVI #SRIDEVIDEATH #ஸ்ரீதேவி #ஸ்ரீதேவிமரணம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People