All
Looks like you've blocked notifications!

இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, தனது கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களோடு வெளிநடப்பு செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது, "மிக மிக மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியால் நிதி இழப்பு ஏற்படும் என முன்னர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது ஜிஎஸ்டி வரியால் லாபம் ஏற்படுகிறது என்கிறார்.

 

இதிலிருந்து மத்தியில் இருக்கும் அரசுக்கு ஜால்ரா போடும் அரசாக தற்போதைய அரசு இருப்பது தெரிகிறது.

 

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்", என தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People