'எங்க போனாலும் வருவோம்'...சிஎஸ்கேவுக்கு ஆதரவு அளிக்க நேரில் செல்லும் 'சென்னை' ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: CSK fans going to Pune via Special Train

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் காரணமாக, சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி,சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது பஞ்சாப் உடனான போட்டிக்குப் பின் புனே சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் நாளை புனேவில் நடைபெறவிருக்கும் போட்டிகளை நேரில் காண்பதற்காக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் சிறப்பு ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டு உள்ளனர். இந்த ரெயில் நாளை காலை புனேவை சென்றடையும்.

 

சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: CSK fans going to Pune via Special Train | தமிழ் News.