MIC Conclave BNS Banner

'நாங்க திரும்பி வந்துட்டோம்னு சொல்லு'... மும்பையில் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Chennai Super Kings won by 1 wicket

வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் இடையிலான முதலாவது ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது.

 

இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கர்ணால் பாண்ட்யா 41 ரன்களையும், இஷான் கிஷான் 40 ரன்களையும் குவித்தனர்.

 

சென்னை அணி சார்பில் சாகர் ,தாஹிர் தலா 1 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

 

தொடக்கத்தில் வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களை இழந்து சென்னை அணி தடுமாறியது. ஒருகட்டத்தில் பந்துகள் கைவசம் இருந்தாலும் 7 விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றிவாய்ப்பு மும்பைக்கு அதிகமாக இருந்தது.

 

ஆனால் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ மும்பையின் வெற்றிக்கணக்கை பெரிதும் தகர்த்தார்.30 ரன்களில் 68 ரன்களைக் குவித்த பிராவோ 18வது ஓவரின் 5-வது பந்தில் பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 159ஆக இருந்தது.

 

19.4-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 165ஆக இருந்தது. 2 பந்துகள் மிச்சமிருந்தன. இதனால் ஆட்டத்தில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், 5-வது பந்தில் கேதார் ஜாதவ் அபாரமாக ஒரு போர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைப் பரிசளித்தார். இதன் மூலம் 1 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.

 

புகைப்பட உதவி @IPL

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings won by 1 wicket | தமிழ் News.