சென்னையின் பிரபல 'கோயில்களுக்கு' விசிட் அடித்த ஐபிஎல் கோப்பை!

Home > News Shots > தமிழ்

By |
IPL Trophy taken to famous temple in Chennai for blessing

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையுடன் நேற்று சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் சென்னையின் பிரபல கோயில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திநகரில் உள்ள பாலாஜி கோயில் ஆகியவற்றுக்கு, ஐபிஎல் கோப்பையை சென்னை அணியினர் எடுத்துச்சென்று ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL Trophy taken to famous temple in Chennai for blessing | தமிழ் News.