MIC Anthem Mobile BNS Banner
'ஜீயர் ஆவதற்கு அடிப்படை தகுதி இன்று தான் எனக்கு தெரிந்தது'... கனிமொழி எம்.பி

 

 

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.

 

அப்போது அவர் பேசுகையில் " ஜீயர் ஆகவேண்டும் என்றால் அதற்கு ஒரு பயிற்சி இருக்கிறது என எனக்கு இன்றுதான் தெரியும். சோடா பாட்டில் அடிக்கணும், கல் அடிக்கணும். இதெல்லாம் தெரிந்துகொண்டால் தான், செய்யாவிட்டாலும் கூட நீங்கள் அந்த பதவிக்கு வர முடியும்.

 

ஜீயர் ஆவதற்கு இதுவரை ஜாதி ஒரு அடிப்படை தகுதியாக இருந்தது. வேறு சில தகுதிகளும் தேவையாக இருந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது. அதற்கு அடிப்படை தகுதி என்னவென்று?'' இவ்வாறு அவர் பேசினார்.

 

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் 'சோடா பாட்டில் வீசவும், கற்களை எறியவும் அஞ்ச மாட்டோம்' என, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

'ஜல்லிக்கட்டு' போல மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பேருந்து கட்டண உயர்வு போராட்டம்: தி.மு.க கட்சிக்கொடி ஏந்தி களத்தில் குதித்த திரைப்பிரபலம்!
 ... பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்....  ... இந்த நிலையில் தி.மு.க-வினர் தாம்பரத்தில் நடத்திய போராட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கையில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். ...  ... இந்த போராட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் " இனி அடிக்கடி தி.மு.க போராட்டங்களில் என்னைப் பார்க்கலாம்&
அஸ்வினை பஞ்சாப்புக்கு தாரை வார்த்த சிஎஸ்கே.. சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 11-வது ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில் இன்று காலை 1௦ மணிக்குத் தொடங்கியது....  ... முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். அவரை பஞ்சாப் அணி 5.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும் ஹைதராபாத் அணி 'ரீடெயின்' முறையில்  தவானைத் தக்க வைத்துக் கொண்டது.... தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னையைத் தவிர, பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது....  ... இறுதியில் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ 7.6௦ கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வினை ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி விட்டுக்கொடுத்தது சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....  
Read More News Stories