MIC Anthem Mobile BNS Banner
'ஜல்லிக்கட்டு' போல மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும், தி.மு.க தொண்டர்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

 

 

சென்னை சேப்பாக்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில் "உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை குறைக்க நாளை வரை காத்திருப்போம்.

 

கட்டணம் குறைக்கப்படவில்லை எனில், 'மொழிப்போர் போராட்டம்', ஜல்லிக்கட்டு போராட்டம்' போல மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறும். அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

 

மேலும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் திங்கட்கிழமை முதல் அனுமதியின்றி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும், மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

பேருந்து கட்டண உயர்வு போராட்டம்: தி.மு.க கட்சிக்கொடி ஏந்தி களத்தில் குதித்த திரைப்பிரபலம்!
 ... பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்....  ... இந்த நிலையில் தி.மு.க-வினர் தாம்பரத்தில் நடத்திய போராட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கையில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். ...  ... இந்த போராட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் " இனி அடிக்கடி தி.மு.க போராட்டங்களில் என்னைப் பார்க்கலாம்&
அஸ்வினை பஞ்சாப்புக்கு தாரை வார்த்த சிஎஸ்கே.. சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 11-வது ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில் இன்று காலை 1௦ மணிக்குத் தொடங்கியது....  ... முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். அவரை பஞ்சாப் அணி 5.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும் ஹைதராபாத் அணி 'ரீடெயின்' முறையில்  தவானைத் தக்க வைத்துக் கொண்டது.... தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னையைத் தவிர, பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது....  ... இறுதியில் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ 7.6௦ கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வினை ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி விட்டுக்கொடுத்தது சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....  
Read More News Stories