All
Looks like you've blocked notifications!

கடந்த சில நாட்களாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏர்செல் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை. ஏர்செல் சேவை முடங்கியதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் பலரும், தங்கள் பகுதிகளில் உள்ள ஏர்செல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த சூழ்நிலையில், ஏர்செல் தலைமை அதிகாரி ஹைசத் ஹீர்ஜி தனது சக பணியாளர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ''மிகவும் இக்கட்டான சூழலில் நாம் நிற்கிறோம்.

 

எந்தவிதமான பண உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இருப்பதை வைத்து சரிசெய்வது மட்டுமே நமது நம்பிக்கை,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள், ஏர்செல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 21, 2018 6:25 PM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People