BGM 2018 Shortfilm BNS Banner

சீமான் பிரபாகரனோடு எட்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தார்: வைகோ காட்டம்

Home > News Shots > தமிழ்

By |
vaiko lashes out seeman

இன்று தேனி, ஆண்டிபட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சீமான் பிரபாகரனுடைய பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து பேசிய வைகோ, "என்னை தமிழன் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் சீமான் கீழ்த்தரமாக பேசி வருகிறார்.

 

பிரபாகரன் உயிருடன் இல்லை என கருதிக்கொண்டு, விடுதலை புலிகளுடைய சின்னத்தை சீமான் அவருடைய கட்சி கொடிக்கு பயன்படுத்தி வருகிறார்.

 

அவர் பிரபாகரனோடு வேட்டைக்கு சென்றதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் மிகப்பெரும் பொய்களை கூறி வருகிறார்.

 

சீமான் பிரபாகரனோடு எட்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தார், புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது கிராபிக்ஸ் செய்து பிரபாகனோடு இருப்பது போன்ற புகைப்படம் வைத்துள்ளார்.

 

இப்போது, உலகநாடுகள் முழுவதும் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என பணம் வசூலித்து வருகிறார்", என காட்டமாக சீமானை விமர்சித்தார்.

Tags : #VAIKO #SEEMAN

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vaiko lashes out seeman | தமிழ் News.