All
Looks like you've blocked notifications!

நாகப்பட்டினம் அருகே தனியார் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய நால்வர், தயாராக இருந்த சொகுசுக்காரில் ஏறிச்சென்றனர்.

 

இதுகுறித்து ஹெலிகாப்டர் பாதுகாப்புக்கு நின்றிருந்த தனியார் பாதுகாவலர்கள், "மலேசியா நாட்டைச்சேர்ந்த தொழிலதிபர்கள் நால்வர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். திருச்சியில் இருந்து தனியார் ஹெலிகாப்டரில் நாகைக்கு வந்து கார் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர்," என தெரிவித்தனர்.

 

ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் கூட்டம்,கூட்டமாக வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை வேடிக்கை பார்த்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | FEB 9, 2018 3:00 PM #HELICOPTER #NAGAPATTINAM #ஹெலிகாப்டர் #நாகப்பட்டினம் #தமிழ் NEWS

Please wait...

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People