பிளே ஆஃப் சுற்றுக்குள் '2-வது அணியாக' உள்ளே செல்லுமா 'நம்ம' சூப்பர் கிங்ஸ்?

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Chennai Super Kings won the toss and Elect to Bat

புகைப்பட உதவி @BCCI

ஜெய்ப்பூரில் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ரஹானேவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

 

பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக ஹைதராபாத் உள்ளே சென்றுவிட்டது. இன்னும் 1 போட்டியில் வென்றால் சென்னை அணியும் உள்ளே சென்று விடும் என்பதால் இன்றைய போட்டி சென்னைக்கு முக்கியமான ஒன்றாகும்.

 

அதே நேரத்தில் இந்த போட்டியில் தோற்றால் தங்களது பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி என்பதால், ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டி அதிமுக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

 

இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர்  கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, இம்ரான் தாஹீர், ஹர்பஜன்சிங், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: ரஹானே(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கவுதம், ஜெயதேவ் உனத்கட், ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பின்னி, சோதி, ஏ ஷர்மா, பிரசாந்த் சோப்ரா.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings won the toss and Elect to Bat | தமிழ் News.