All
Looks like you've blocked notifications!

சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்தார்.

 

இந்த வழக்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி என தஷ்வந்த்தை இன்று அறிவித்து அவருக்கு மரணதண்டனை வழங்கியது. இந்த நிலையில், தீர்ப்பு வெளியானதும் சிறுமி ஹாசினியின் தந்தை பாபு தனது மகளின் புகைப்படத்தை செல்போனில் பார்த்து கதறிக்கதறி அழுதார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " எனது மகளைக் கொன்ற தஷ்வந்துக்கு நீதிமன்றம் மரணதண்டனை அளித்ததை வரவேற்கிறேன். எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது.

 

எனது மகள் இறப்புக்கு நியாயம் கேட்டு போராடிய காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி," இவ்வாறு அவர் பேசினார்.

BY MANJULA | FEB 19, 2018 5:31 PM #HASINI #HASINIMURDERCASE #DHASHVANTH #ஹாசினி #ஹாசினிகொலைவழக்கு #தஷ்வந்த் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People