All
Looks like you've blocked notifications!

சென்னை வடபழனியில் உள்ள தனியார் செல்போன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வரும் ஊர்மில் டோலியா (43), தன் மகனை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

தன் மகன் மாதவ் டோலியாவை (7) ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்வதாக, வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ஊர்மில் டோலியா, தான் பணிபுரியும் கடைக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

 

கடைக்குச் சென்ற பின் தன் மகனின் கையை அறுத்த ஊர்மில் டோலியா தனது கையையும் அறுத்துள்ளார். ரத்தம் வெளியேறியதால் மகன் மாதவ் டோலியா துடிதுடித்து இறக்க, அவரது தந்தை மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BY SATHEESH | MAR 17, 2018 8:29 PM #TAMILNADU #CHENNAI #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories
Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People