‘50 பந்துகளில் சதம்’.. அணியின் வெற்றிக்காக அட்சுத்தூக்கிய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 30, 2019 03:29 PM

வங்கதேச பிரீமியர் லீக் டி20 போட்டியில் 50 பந்துகளில் சதம் அடித்து டி-வில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.

AB de Villiers slams a 100 runs and helps the team to win

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியைப் போன்றே வங்கதேசத்தில் பிரீமியர் லீக் (பிபிஎல்) டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் தென்னாப்ரிக்க வீரர் ஏபி டி-வில்லியர்ஸ் ஒரு அசத்தலான சதத்தை எடுத்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களால் ‘மிஸ்டர் 360’ என அழைக்கப்படும் தென்னாப்ரிக்க வீரர் ஏபி டி-வில்லியர்ஸ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.  ஆனால் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்ததுதான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ஏபி டி-வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விளையாடியது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. மேலும் தற்போது வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக் டி20 போட்டியில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஏபி டி-வில்லியர்ஸ் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்த ஏபி டி-வில்லியர்ஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #AB DE VILLIERS #BPL2019