All
Looks like you've blocked notifications!

மயிலாப்பூர் காரணீஸ்வரர் தெரு இரண்டாவது சந்தில் நிர்மலா (65) என்ற மூதாட்டி நடந்து சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர் அவரிடமிருந்து 9 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முற்பட்டார்.

 

இந்த கொள்ளையை சற்றும் எதிர்பாராத நிர்மலா அதிர்ச்சியடைந்தார். எனினும் உடனே சுதாரித்துக்கொண்டு அவர் கத்திக் கூச்சலிட்டார். நிர்மலாவின் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அந்தத் திருடனைப் பிடித்து அடித்து உதைத்தனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்தத் திருடனிடம் விசாரணை நடத்தினர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவரின் பெயர் சுனில் என்பதும் அவர் பல்லவன் நகரை(சென்னை) சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BY MANJULA | FEB 14, 2018 1:07 PM #CHENNAI #CHAINSNATCHING #சென்னை #நகைபறிப்பு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People