ரூ.10 லட்சம் கொடுத்தாலும் இது சீமானுக்கு தான் - இயக்குநரிடம் கவிஞர் வைரமுத்து கறார்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலுக்கு ரூ.10 லட்சம் பெற்று தருவதாக இயக்குநர் சீனு ராமசாமி கூறியும், வைரமுத்து அதனை மறுத்துள்ளார்.

ஆ.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சீமான் திரைக்களத்தில் சுப்ரமணியன் இயக்கும் திரைப்படம் ‘அமீரா’. இந்த படத்தில் ஒரு திருடனின் வாழ்வில் குறிக்கிடும் பெண்ணின் அழகு அந்த திருடனை திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலயே மாற்றிவிடுகிறது.

இந்த சூழலலுக்கு ஏற்ப கதாநாயகியின் அழகை வர்ணிப்பது போன்ற பாடலை, 15 நிமிடங்களில் கவிஞர் வைரமுத்து எழுதி முடித்துள்ளார். அப்போது எதார்த்தமாக போனில் வைரமுத்துவை தொடர்புக் கொண்ட இயக்குநர் சீனு ராமசாமியிடம் இந்த பாடலை பற்றி வைரமுத்து பேசியுள்ளார்.

பாடலை கேட்டதும், இது தனது கதைக்கும், கதாநாயகிக்கும் கச்சிதமாக பொருந்தும், இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்றாராம் வைரமுத்து. இந்தப் பாட்டுக்கு மட்டும் ரூ.10 லட்சம் வாங்கித் தருகிறேன் கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர் சிரித்துக்கொண்டே.

இதோ அந்த அழகான பாட்டு :

ஆதார் அட்டையிலும்

Vairamuthu rejects Seenu Ramasamy requests even after he will ready to pay Rs.10 Lakh for Seeman's song
அழகானவள்
அழுகின்ற வேளையிலும்
அழகானவள்

ஆடை சூடியும்

அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்

பேசும்போதும் அழகானவள்  - நீ
பேசாத போது பேரழகானவள்

நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்

பத்துகிராம் புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்

ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன்
ஆடை ஓரம் உரசும் போது
அடிமையாகிப் போனேன்

சாயம்போன  வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்

அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்