MIC Anthem Mobile BNS Banner
போராட்டத்தில் பங்கேற்க பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்

 

 

உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்துக்கு எதிராக திமுக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்கு இன்று பேருந்தில் பயணம் செய்தார்.

 

அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த் " பேருந்து கட்டண உயர்வால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மக்கள் பொறுமை காக்க வேண்டும் என முதல்வர் சொல்கிறார், எப்படி முடியும்?.

 

தமிழகத்தில் தற்போது நிர்வாகத்திறமை இல்லாத ஆட்சி நடக்கிறது. பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் தொடரும்" என்றார்.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

'அனுமதியின்றி போராட்டம்'... தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி கைது!
Read More News Stories