''குணா கற்பனையிலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார் கமல்'': அமைச்சர்

கமல் ஹாசன் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார், இது தொடர்ந்தால் அவர் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

 

மேலும் பேசிய அவர் கூறியதாவது: கமல் குணா திரைப்படத்தில் வருகிற கதாபாத்திரத்தின் கற்பனையிலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும்போது தமிழ்நாட்டை விட்டே போவேன் என்று கூறியவர் கமல் ஹாசன். அவர் தற்போது யாருடைய கைப்பாவையாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

 

முன்னதாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என பதிவிட்டிருந்தார்.

BY |

OTHER NEWS SHOTS

''குணா கற்பனையிலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார் கமல்'': அமைச்சர்
கமல் ஹாசன் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார், இது தொடர்ந்தால் அவர் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்....  ... மேலும் பேசிய அவர் கூறியதாவது: கமல் குணா திரைப்படத்தில் வருகிற கதாபாத்திரத்தின் கற்பனையிலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார். ஜெயலலிதா இருக்கும்போது தமிழ்நாட்டை விட்டே போவேன் என்று கூறியவர் கமல் ஹாசன். அவர் தற்போது யாருடைய கைப்பாவையாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது....  ... முன்னதாக கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என பதிவிட்டிருந்தார்....
Read More News Stories