சென்னை: மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து நான்கு பேர் பலி

Home > News Shots > Tamil Nadu

By |
Four dead after falling from MRTS train in Chennai

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை-திருமால்பூர் ரயிலில் பயணித்த சிலர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததாகவும் அதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறந்தவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒருவர் பள்ளி மாணவர் என கூறப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலில் கடும் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டுகளில் பலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.


முன்னதாக நேற்று இரவும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்த இருவர் நடைமேம்பால தூணில் மோதி உயிரிழந்தனர்.

Tags : #MRTSTRAINACCIDENT #FOURDEAD #STTHOMASMOUNT