BGM 2018 Shortfilm BNS Banner

கணவன் கண்டிப்பால் 'மனமுடைந்த' மனைவி இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By |
Woman commits suicide after poisoning her 2 children

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி, தன் மனைவி பிரியா (25) மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

கணவரின் வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரியா தன்னுடைய கணவருக்கு தெரியாமல் ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

 

இது மூர்த்திக்கு தெரியவந்தபோது, மனைவியை நேற்று கண்டித்துவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். பிரியாவின் மூத்த குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.

 

கணவரின் கண்டிப்பால் மனமுடைந்த பிரியா, தன் வீட்டில் இருந்த மகள் முருகேஸ்வரி (4) மற்றும் மகன் விஜய்கணேஷ் (8 மாதம்)  ஆகியோருக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மதியம் வீடு திரும்பிய மூர்த்தி, மனைவியும் குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #SUICIDE

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman commits suicide after poisoning her 2 children | தமிழ் News.