நீட் துயரம்: கேரளாவில் உயிரிழந்த 'கிருஷ்ணசாமி' குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By |
Tamil Nadu government announced 3 lakhs relief fund for Krishna Swamy

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் நாலந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

 

அவருக்குத் துணையாக அவரது தந்தை கிருஷ்ணசாமியும் சென்றிருந்தார். கஸ்தூரி தேர்வெழுத சென்றபின் விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

கிருஷ்ணசாமியின் உடலை எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் எடுத்து வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : #NEETEXAM #KERALA #KRISHNASWAMY

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu government announced 3 lakhs relief fund for Krishna Swamy | தமிழ் News.