All
Looks like you've blocked notifications!

திருச்சியை அடுத்த துவாக்குடி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற உஷா - ராஜா தம்பதியினரை நிறுத்தியுள்ளார்.

 

அப்போது நிற்காமல் சென்ற உஷா - ராஜா தம்பதியினரை இருசக்கர வாகனத்தில்  விரட்டிச் சென்ற போலீசார் காமராஜ், தம்பதியினருடைய இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில் கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ராஜா காயமுற்றதாகவும் தெரியவந்துள்ளளது. உயிரிழந்த உஷா மூன்று மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத்தொடர்ந்து, கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 8, 2018 9:23 AM #POLICEMANJAILED #TAMILNADUPOLICE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People