All
Looks like you've blocked notifications!

இந்திய கேப்டன் விராட் கோலி தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் போட்டியில் தனது 33-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், ஐ.சி.சி தரவரிசையில் இருக்கும் அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்தவர் என்ற பெருமை கோலிக்குக் கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில், ''விராட் கோலி எல்லா அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம். ஆனால் இப்போதைய எங்களது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடிக்க முடியாது.

 

எங்களது பந்துவீச்சாளர்கள் அவரை சதம் அடிக்க விட மாட்டார்கள்,'' என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இந்தியா-பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையால், இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்த முடியாத சூழல் தற்போது நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 7, 2018 5:51 PM #VIRATKOHLI #PAKISTAN #INDIA #விராட்கோலி #இந்தியா #பாகிஸ்தான் #தமிழ் NEWS

Please wait...

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People