MIC Conclave BNS Banner

பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கி சென்றது: தாய் கண்ணீர்!

Home > News Shots > தமிழ்

By |
monkey escaped with 16 days old baby

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில், பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை குரங்கு தூக்கி சென்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தலபஸ்தா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று, பிறந்து 16  நாட்களே ஆன குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த குரங்கு அந்த குழந்தையை தூக்கி சென்றுள்ளது.

 

அதனை கண்ட அக்குழந்தையின் தாய் கூச்சலிட, அங்கு திரண்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பின்பு, 30 வனத்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் சேர்ந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

 

ஆனால், எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குழந்தை பிணமாக மிதந்துள்ளது.

 

குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MONKEY

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Monkey escaped with 16 days old baby | தமிழ் News.