தஞ்சை பெரிய கோவிலில் அடுத்த ரெய்டு: ஏதேனும் சிக்கியதா?ஏடிஎஸ்பி விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 30, 2018 11:17 AM
Idol Wing lodges plaint on stolen statues in Tanjore Temple

தஞ்சை பெரிய கோயிலில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. சென்னையில் அண்மைக்காலமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில்  சோதனைகளை அடுத்து தஞ்சை கோயிலிலும் 10 பேர் கொண்ட அவரது குழு அதிரடியாக ஆய்வு செய்துள்ளது.


தஞ்சை பெரிய கோவிலில், புராதன சிலைகள் கணக்கெடுப்பு,  பழமையான சிலைகள் ,  பலரது பெயர்கள் தமிழில்  சிலைகள் மீது பதிக்கப்பட்டுள்ள விபரங்களை ஆய்வாக மேற்கொண்டு வருவதாக தஞ்சை பெரிய கோவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் கூறியுள்ளார்.   அதோடு, சிலை கடத்தல் புகார் பற்றிய விசாரணைகளுக்கு உயர் நீதிமன்றம் தகுந்த கால அவகாசம் கொடுத்துள்ளதால் விரைவில் ஆவணங்களுடன் அறிக்கை கொடுப்போம் என்றும் கூறினார்.


அதே சமயம், மீட்கப்பட்ட சிலைகளை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்க எந்த தடையும் இல்லை,  பொன் மாணிக்கவேல்தான் இதுவரை அரசை அணுகவில்லை என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Tags : #IDOLTHEFT #IDOLWING #IGPONMANICKAVEL #TANJORE #TANJORETEMPLE