திருமணம் நடந்தது உண்மையா? போலியா? - மாறி மாறி புகார் கூறும் ஹீரோ-ஹீரோயின்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தன் மீது நடிகை அதிதி மேனன் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நடிகர் அபி சரவணன், சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

Pattadhari actor Abi Saravanan clarifies his wife Adhiti Menon's allegations on him

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘பட்டதாரி’ திரைப்படத்தில் அதிதி மேனன் மற்றும் அபி சரவணன் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், சில காலங்களில் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக அபி சரவணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அபி சரவணின் புகாரை மறுத்த அதிதி மேனன், தன் மீது அவதூறு பரப்புவதாக அபி சரவணன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அதிதி மேனன், இருவரும் காதலித்தது உண்மை தான் ஆனால், அபி சரவணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பேசி பிரிந்துவிட்டோம். எனது சமூக வலைத்தள பக்கங்களை ஹேக் செய்து எனது சுய விவரங்களை திருடி திருமணம் ஆனது போல் போலி ஆவணங்களை உருவாக்கியிருக்கிறார். சமூக சேவைகளில் ஈடுபடுவது போல் அதில் வரும் பணத்தை வைத்து சொத்து சேர்த்ததாக அபி சரவணன் மீது அதிதி புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிதி மேனனின் புகாருக்கு விளக்கம் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபி சரவணன், இவ்விவகாரம் தொடர்பாக தன்னிடம் உள்ள ஆவணங்களை வெளியிட்டார். தனது காதல் மனைவியை சிலர் மூளை சலவை செய்திருப்பதாகவும், தனது சமூக சேவை பணிகளை கொச்சைப்படுத்தும் விதமாக புகார் கூறியதாலும், தற்போது செய்தியாளர்களை சந்திக்க நேர்ந்ததாக அபி சரவணன் தெரிவித்தார்.

மேலும், இருவருக்கும் நடந்த பதிவு திருமணம், தனது சொத்து விவரம் தொடர்பான ஆவணங்கள், தனது சமூக சேவை குறித்து விவரங்களை நடிகர் அபி சரவணன் பகிர்ந்துக் கொண்டார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்தார். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தனது திருமணம் தொடர்பான வழக்கு இருப்பதாகவும், தனக்கும், தனது மனைவிக்கும் இடையிலான பிரச்னையை சமரசம் செய்து வைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் தெரிவித்திருப்பதாக அபி சரவணன் கூறியுள்ளார்.