சென்னையில் கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து - ஒருவர் பலி, 17 பேர் காயம்

Home > News Shots > Tamil Nadu

By |
Chennai: One dead, 17 injured after scaffolding collapses in kanthanch

சென்னை கந்தன்சாவடி பகுதியில் நேற்று தனியார் மருத்துவமனையின் கட்டுமான பணியின்போது இரும்புத்தூண் மற்றும் சாரம் பாரம் தாங்காமல் சரிந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.


கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


மருத்துவமனையின் பின்புறம் ஜெனரேட்டர் வைப்பதற்காக பிரமாண்ட அறை கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #CHENNAIBUILDINGCOLLAPSE #KANTHANCHAVADI