பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By |
Popular Serial Actress Priyanka commits Suicide

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த பிரியங்கா என்னும் நடிகை, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்த நடிகை பிரியங்கா, நேற்று தனது வீட்டின் உள்ளே சென்று தாளிட்டுக்  கொண்டுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்காததால் அவரது கணவர் காவல்துறைக்கு புகார் அளிக்க, காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

 

அங்கு பிரியங்கா தூக்கில் சடலமாகத் தொங்க, அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவருக்குள் ஏதேனும் தகறாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குழந்தை இல்லாததால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Popular Serial Actress Priyanka commits Suicide | தமிழ் News.