Biggest Icon of Tamil Cinema All Banner

11 பேர் தற்கொலையில் 'மர்ம நபருக்கு' தொடர்பு?.. திடுக்கிடும் உண்மைகள்!

Home > News Shots > தமிழ்

By |
Police probing presence of 12th person in Delhi family deaths case

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்?உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்திருந்தனர்.

 

மேலும் வீட்டின் சுவர்களில் சில விசித்திரமான தடயங்களும் போலீசாருக்குக் கிடைத்துள்ளன. வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அந்த குழாய்கள் உள்ளே எதனுடனும் இணைக்கப்படவில்லை. இதனால் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

இந்த நிலையில் இவர்கள் மரணத்தில் 12-வதாக ஒரு மர்ம நபர் உள்ளே வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இறந்தவர்களின் வீட்டின் உள்ள கதவுகள் தாழ்ப்பாள் போடாமல், வெறுமனே அடைத்து மட்டும் வைக்கப்பட்டுள்ளன.

 

இதனை முக்கிய துருப்புச் சீட்டாக கருதும் போலீசார், தற்கொலை செய்யும் போது அதிசக்திகள் வந்து தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கதவை பூட்டாமல் வைத்திருக்கலாம். இல்லையெனில் 12-வதாக ஒரு நபர் அந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் என்ற இரு கோணத்தில் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Police probing presence of 12th person in Delhi family deaths case | தமிழ் News.