IPL Predict and Win All pages

ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் படிக்கணுமா?.. ஆசை வார்த்தைகளால் 'மாணவிகளை' வளைக்கப்பார்த்த நிர்மலாதேவி!

Home > News Shots > தமிழ்

By |
Nirmala Devi Audio Conversation with College Students

அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் செல்போனில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த ஆடியோவில் மாணவிகள் நான்கு பேரிடம் பேசும் பேராசிரியை நிர்மலாதேவி, தொடர்ந்து ஆசை வார்த்தைகள் மூலம் மாணவிகளை வளைக்க முயற்சிக்கிறார்.

 

ஆனால் மாணவிகள் எங்களுக்கு அதுபோல எண்ணம் எதுவுமில்லை என்று கூறுகின்றனர். சிலர் இது கேவலம் என்கின்றனர். ஆனால் மாணவிகளின் எதிர்மறை பதில்கள் குறித்து கவலைப்படாத நிர்மலா தேவி, தொடர்ந்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறுகிறார்.

 

எனினும், மேற்படிப்பு படிக்க ஆசையில்லை அரசுத் துறையில் தேர்வு எழுதப்போகிறோம் என்று மாணவிகள் தட்டிக்கழிக்க, “நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன். இந்த டிஎன்பிஎஸ்சி லொட்டு லொசுக்கு எல்லாம் சாதாரணம்” என நிர்மலா பேசுகிறார். 

 

மேலும், மாணவிகளுக்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் படிக்கவும் ஏற்பாடு செய்து தருவதாக ஆசைக்காட்டுகிறார்.

 

தற்போது, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில், வழக்கின் முக்கியத்துவம் கருதி அருப்புக்கோட்டை நகரக் காவல்நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #NIRMALADEVI #MADURAI

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nirmala Devi Audio Conversation with College Students | தமிழ் News.