BGM 2018 Shortfilm BNS Banner

ஆடுகளை காப்பாற்ற புலியுடன் போராடிய வீரமங்கை!

Home > News Shots > தமிழ்

By |
Indian woman fights with tiger to save her goats

வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை வேட்டையாட வந்த புலியை இளம்பெண் ஒருவர் தடியால் அடித்து விரட்டிய சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

 

நாக்பூரில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபாளி மேஷ்ரம் (23). தனது தாய் ஜிஜா பாய்-உடன் வசித்து வருகிறார்.

 

கடந்த 29-ம் தேதி, வீட்டின் வெளியே உள்ள பட்டியில் ஆடுகளை கட்டிவிட்டு, வீட்டினுள் படுத்து தூங்கியுள்ளார் ரூபாளி மேஷ்ரம்.

 

இந்நிலையில், நள்ளிரவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு வெளியே வந்த ரூபாளி, தன்னுடைய ஆட்டு பட்டியினுள் புலி ஒன்று ஊடுருவதை கண்டுள்ளார்.

 

உடனே, தன் கையில் கிடைத்த சிறு தடியுடன் புலியுடன் போராடியுள்ளார் ரூபாளி. மகளின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த தாய், ரூபாளியை வீட்டினுள் அழைத்து சென்றுள்ளார்.

 

கடும்பசியுடன் இருந்த புலி, ஆடு ஒன்றை கவ்வி சென்று விட்ட நிலையில், ரூபாளியும் அவருடைய தாயும் உடலில் ஆங்காங்கே சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

Tags : #WOMANFIGHTSWITHTIGER

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian woman fights with tiger to save her goats | தமிழ் News.