"பள்ளிக்கூட தண்ணீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு":அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 26, 2018 11:59 AM
Human Skeleton Found Inside Water Tank In Delhi School

பராமரிப்பு பணிக்காக பள்ளிக்கூட தண்ணீர் தொட்டியை திறந்த போது அதில் மனித எலும்புக்கூடு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி அருகே உள்ள முக்மேல்பூரில் எம்சிடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.பள்ளியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரிய மேல்நிலை தொட்டியானது செயல்பட்டு வருகிறது.அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துப்புரவு பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை திறந்தார்கள்.அப்போது அதில்  மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது.இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் எலும்பு கூடை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த தொட்டியில் வேறு ஏதேனும் எலும்பு துண்டுகள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

தடயவியல் ஆய்வின் முடிவில் தான் மேற்கொண்டு தகவல்களை கூறமுடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள்.மேலும் ஆசிரியர்கள்,மாணவர்கள், துப்புரவு பணியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.

Tags : #HUMAN SKELETON #WATER TANK #DELHI SCHOOL