போயஸ் கார்டன் பங்களாவுக்காக 3 படங்களா ? - ஜெயம் ரவி விளக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் ஜெயம் ரவி தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். ஹிப்ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Jayam Ravi Clarifies the Rumour he is doing 3 films in same Banner for Poes Garden house

இதனையடுத்து ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் நடிக்கவிருப்பதாக  அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின்  வீட்டை பெறுவதற்காகவே ஒரே நிறுவனத்துடன் மூன்று படங்களில் நடிக்க ஒப்ப்புக்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இதனையடுத்து ஜெயம்ரவியின் ரசிகர் ஒருவர், 'எங்கள் அண்ணா ஜெயம் ரவி எப்பொழுதுமே எங்களுக்காக மட்டும் தான் படம் பண்ணுவாரு. அவர் எப்படினு எங்களுக்கு தெரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்த ஜெயம் ரவி, எனது ரசிகர்கள் என்னை புரிந்து கொண்டமைக்காக மகிழ்ச்சி.  ஒரு செய்தியை வெளியிடும் முன், அதன் உண்மைதன்மையை கொஞ்சம் ஆராயுங்கள் என ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.