ராவணன் (2010)
ராவணன் (2010)

ராவணன் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். சுகாசினி மணிரத்தினம் இதற்கு உரையாடல் எழுதினார். விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் கார்த்திக், பிரபு, பிரியாமணி என்று மேலும் பலர் நடித்தனர். ஏ. ஆர். ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் இந்தியிலும் வெளியிடப்பட்டது.