பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் காலமானார்- நடிகர் சிவக்குமார் இரங்கல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Famous Stage Speaker Ilampirai Manimaran's Husband passed away- Actor Sivakumar condolence

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மணிமாறன் நேற்று பகல் 12 மணிக்கு காலமானார். மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு இளம்பிறை மணிமாறனுக்கு ஈடு செய்ய முடியாதது.

மணிமாறன் குறித்து நடிகர் சிவகுமார் கூறியது :-

வ்தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம்,  கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர் இளம்பிறை மணிமாறன், கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார்.


கடந்த 2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும்  2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர்  இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார்.

அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன். ஈடு செய்ய முடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.