தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘துப்பாக்கி முனை’ திரைப்படத்தை தொடர்ந்து ‘அசுரகுரு’, ‘வால்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் கதாபாத்திரத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Actor Vikram Prabhu 's next is a COP Subject to be helmed by Tamilarasan

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி (LLP) தயாரிப்பில் வெளியான  நயன்தாராவின் ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இந்நிறுவனத்தின் 3வது படைப்பான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்க்கும் இப்படத்தின் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய தமிழரசன் இப்படத்தை இயக்குகிறார். அமேசான் பிரைமின் முதல் தமிழ் வெப் சீரிஸ் ‘வெள்ள ராஜா’விற்கு ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.