புல்வாமா தாக்குதல்- உயிர் நீத்த தியாகியின் நினைவிடத்தில் ஹரிஷ் கல்யாண் அஞ்சலி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மரியாதை செலுத்தினார்.

Actor Harish Kalyan paid tribute to Martyr Subramanian tomb in Thoothukudi

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புல்வாமா தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகிய இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.