பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத விதமாக சரவணனை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டார். அதே நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷனும் உள்ளது.

இதனால் பிக்பாஸ் வீட்டின் ஸ்ட்ரென்த்தை அதிகரிக்க நேற்று நடிகை கஸ்தூரியை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பினார் பிக்பாஸ். உள்ளே வந்த கஸ்தூரி 45 நாட்கள் நிகழ்ச்சியை பார்த்து யார் யார் எப்படி என்ற கணக்கோடு வந்திருப்பதால் வந்த வேகத்திற்கு எல்லோரையும் இக்கு வைத்து பேசி மிரள விட்டார்.

கஸ்தூரி
கஸ்தூரி

இந்த வாரம் ஜெயில் தண்டனை இல்லை என்பதை கஸ்தூரி மூலமாக அறிவித்தார் பிக்பாஸ். ஆனால் அதற்கு பதிலாக கஸ்தூரி, அவர் விரும்புபவருக்கு தண்டனை கொடுக்கலாம் அதற்கான ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாயாலேயே அறிவிக்க செய்தார்

இதைத்தொடர்ந்து கஸ்தூரி ஹவுஸ்மேட்களில் சிலருக்கு தண்டனை வழங்கினார்