இளம் பெண் இயக்குநர் மர்ம மரணம்-திரையுலகம் அதிர்ச்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இளம் மலையாள பெண் இயக்குநர் நயன சூர்யன் மர்மமான முறையில் அவரது அபார்ட்மெண்ட்டில் சடலமாக கிடந்தது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Malayalam filmmaker Nayana Sooryan found dead in her apartment

மறைந்த பிரபல மலையாள இயக்குநர் லெனின் ராஜேந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நயன சூர்யன், பல்வேறு இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பக்ஷிகளுடே மனம் என்ற திரைப்படத்தையும் நயன சூர்யன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் பிப்.25ம் தேதி திங்கட்கிழமை மாலை நயன் சூர்யனுக்கு அவரது தாய் போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக முயற்சித்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால், அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நயன சூர்யனின் அபார்மெண்ட்டுக்கு சென்று பார்த்தபோது, நயன சூர்யன் மர்மமான முறையில் தனது படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஜன.14ம் தேதி காலமான இயக்குநர் லெனின் ராஜேந்திரனின் மறைவு நயன சூர்யனை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

எனினும், நயன சூர்யனின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.