ரொமான்ஸ் இல்ல, டிராமா தான் - கணவர் காதல் சொன்ன தினத்தை கொண்டாடும் குஷ்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தனது கணவர் இயக்குநர் சுந்தர்.சி தன்னிடம் காதலை வெளிப்படுத்திய தினத்தை கொண்டாடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Khushbu Sundar celebrates her Proposal Day anniversary today

தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கில் கலக்கியவர் இயக்குநர் சுந்தர்.சி. ‘முறைமாமன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சுந்தர்.சி, நடிகை குஷ்பு இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு மார்ச்.9ம்தேதி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆனால், கடந்த 1995ம் ஆண்டு பிப்.22ம் தேதி தான் சுந்தர்.சி தன்னிடம் காதலைச் சொல்லி 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், இன்று தான் சுந்தர்.சி என்னிடம் அவரது காதலைச் சொன்னார். ரொமாண்ட்டிக்காக அல்ல, டிராமாட்டிக்காக சொன்னார். இந்த தினத்தையும் திருமண நாளாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.